டிசம்பர் 17-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

கோவை, டிசம்பர் 11

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர்மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் டிசம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர்மன்றம் சார்பில் வரும் டிசம்பர் 17ம் தேதியன்று 10 மணியளவில் மலுமிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெறும் இப்போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம். இதில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஜூனியர் பிரிவாகவும், 9 முதல் 11-ம் வகுப்பு வரை சீனியர் பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும்.

ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உட்பட பங்கேற்பாளர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே கொண்டு வர வேண்டும். போட்டி துவங்கும் முன் தலைப்புகள் அறிவிக்கப்படும். குறிப்பாக, கிராமிய நடனப் போட்டியிலும், திரைப்படப் பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனத்திற்கு அனுமதி இல்லை. கிராமிய நடனத்தில் முறையான கரகம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்களாக இருக்க வேண்டும்.

பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு பெறும் சிறார்களுக்கு அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெறுவர். மேலும், விபரங்களுக்குக் கோவை மாவட்ட ஜவகர் சிறுவர்மன்ற திட்ட அலுவலரை 97515 - 28188 அல்லது கலைப் பண்பாட்டுத் துறையின் கோவை மண்டல அலுவலகத்தை 0422- 22610290 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...