டிசம்பர் 17-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

கோவை, டிசம்பர் 11

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர்மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் டிசம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர்மன்றம் சார்பில் வரும் டிசம்பர் 17ம் தேதியன்று 10 மணியளவில் மலுமிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெறும் இப்போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம். இதில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஜூனியர் பிரிவாகவும், 9 முதல் 11-ம் வகுப்பு வரை சீனியர் பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும்.

ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உட்பட பங்கேற்பாளர்களுக்குத் தேவையானவற்றை அவர்களே கொண்டு வர வேண்டும். போட்டி துவங்கும் முன் தலைப்புகள் அறிவிக்கப்படும். குறிப்பாக, கிராமிய நடனப் போட்டியிலும், திரைப்படப் பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனத்திற்கு அனுமதி இல்லை. கிராமிய நடனத்தில் முறையான கரகம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்களாக இருக்க வேண்டும்.

பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு பெறும் சிறார்களுக்கு அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெறுவர். மேலும், விபரங்களுக்குக் கோவை மாவட்ட ஜவகர் சிறுவர்மன்ற திட்ட அலுவலரை 97515 - 28188 அல்லது கலைப் பண்பாட்டுத் துறையின் கோவை மண்டல அலுவலகத்தை 0422- 22610290 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...