சங்கர் கொலை வழக்குத் தீர்ப்பு, ஆணவக் கொலைகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி : கவுசல்யா பேட்டி


டிசம்பர் 12

ஆணவக் கொலை செய்ய நினைப்பவர்களுக்கு சங்கர் வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும் என கவுசல்யா தெரிவித்துள்ளார். 

உடுமலையில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட சங்கரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் இன்று தண்டனை அறிவித்தது. கவுசல்யாவின் தந்தைக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், 5 பேருக்குத் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், இரண்டு பேருக்கு முறையே ஆயுள்தண்டனையும், 5 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. 

இந்தத் தீர்ப்பு குறித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கவுசல்யா,  சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு வரவேற்பு  தெரிவித்துள்ளார்.  மேலும், அவர் பேசுகையில், ஆணவக் கொலை செய்ய நினைப்பவர்களுக்கு சங்கர் வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும். இந்தக் கொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமையும். மேலும் சங்கர் கொலை வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துள்ளது.

 

அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். 3 பேருக்கும் தண்டனை பெற்றுத் தரும் வரை தனது சட்ட போராட்டம் ஓயாது. சாதி, ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். எனக்கும், சங்கரின் குடும்பத்தாருக்கும் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சாதி வெறியர்களுக்கு இந்தத் தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...