குமரியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் : உயிரிழந்த மீனவர்களுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

டிசம்பர் 12 

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் சென்றார். மாவட்ட எல்லையான காவல் கிணற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

காவல்கிணற்றில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேராக தூத்தூர் மீனவ கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள புனித யூதா ததேயூ கல்லூரியில் 8 கிராம மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஓகி புயலில் வீடு இழந்தவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். பின்னர், மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.



பின்னர், அங்கிருந்து மணவாளக்குறிச்சியை அடுத்த வெள்ளிமலை கல்படி ஏலாவில் விவசாயிகளை சந்தித்துப் பேசிய அவர்,  அங்குச் சேதமான பயிர் நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டம் வருகையையோட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...