ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசிடம் ஆளுநர் கோரிக்கை

டிசம்பர் 12

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோரிக்கை விடுத்துள்ளார். 

டெல்லி சென்ற அவர் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியுள்ளார். குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டோர் நிலை குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும், புயல் நிவாரண நிதி தருமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் தமிழக ஆளுநர் கோரிக்கை வைத்துள்ளார். அதன் பிறகு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்துப் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைத்து தமிழகத்துக்கு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தார். பின்னர், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் திரிபுரா ஆளுநர்களுடன் இணைந்து தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்துப் பேசினார். 

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டெல்லிக்குச் சென்று மத்திய அரசிடம் ஆளுநர் ஓகி புயலுக்கு நிவாரணமாக நிதி கோரியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...