ஹாசினி மற்றும் தாயை கொலை செய்த தஷ்வந்த் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரமாரி தாக்குதல்


சென்னை

சிறுமி ஹாசினி மற்றும் தாய் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் சிலர் கடும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாயை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த நிலையில் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட தஷ்வந்த், காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தாயை கொன்றது ஏன் என்றும், பணம் கொடுக்காமல் இருந்ததால் தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். தனது கொலையை ஒப்புக்கொண்டதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தஷ்வந்த் இன்று செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பெண்கள் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் இருந்து தஷ்வந்தை மீட்ட காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

பின் வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, சிறுமி ஹாசினி மற்றும் தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்தை வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் விலகல்:-

இதனிடையே ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் இந்த வழக்கில் இருந்து விலகி விட்டார். தஷ்வந்திற்காக இனி ஆஜராகப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...