இயற்கை மருத்துவப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பு: உதகை கருத்தரங்கில் தகவல்

நீலகிரி, டிசம்பர் 13

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இயற்கை மருத்துவப் பொருள்களின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளதாக உதகையில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மைசூரில் செயல்பட்டு வரும் ஜே.எஸ்.எஸ். பல்கலைக் கழகத்தின் சார்பில் உதகையில் உள்ள ஜே.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரியில் இயற்கை மூலிகை மருந்துகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், மியான்மர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, உகாண்டா, ஜெர்மனி உள்ளிட்ட நாட்டின் பிரதிநிதிகளுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், கருத்தரங்கின் தலைவர் பேராசிரியர் சின்னசாமி பேசுகையில், மூலிகை மருத்துவம் என்பது ஒரு செடியிலிருந்தோ, பழத்திலிருந்தோ ஒரு மூலக்கூற்றை மட்டும் தனியாகப் பிரித்து மருந்து உண்டாக்குவது அல்ல. அந்த தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேவையான சத்தைப் பிரித்து மருந்து தயாரிப்பதாகும். கடந்த 10 ஆண்டுகளாக  இயற்கை வழி மருந்துகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.



எத்தகைய சிகிச்சை முறையாக இருந்தாலும் இயற்கை மருந்துகள்தான் அவற்றுக்கு ஆதாரமாகும். விலங்குகளிடமிருந்தும் தற்போது மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் ஜீன் பரிமாற்ற முறையிலேயே மருந்துகள் தயாரிக்கப்படும் சூழலும் உருவாகி வருகிறது. மூலிகை மருந்துகளுக்கு ஐஎஸ்ஓ தரக் கட்டுப்பாடு பெறும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகிறது என்றார்.

இதனைத்தொடர்ந்து, வேலூரைச் சேர்ந்த இயற்கை மருந்து ஆராய்ச்சியாளர் டாக்டர் நரசிம்மன் பேசுகையில், இயற்கை மருந்துகளின் முக்கியத்துவம் தற்போது உலகெங்கும் பரவி வருவதால் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் மருந்து உற்பத்தியும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதோடு குறிப்பிட்ட நிறுவனத்துடைய மருந்துகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்றார்.



தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் ஜேஎஸ்எஸ் பார்மஸி கல்லூரியின் தலைவர் டாக்டர் தனபால், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சீனிவாச பட்னாலா, சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராமன், ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் நிர்மல் ராபின்சன் உள்ளிட்டோர் இயற்கை மருத்துவத்தின் பயன் மற்றும் வளர்ச்சிகள் குறித்து பேசினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...