ஆணவ படுகொலைக்கு எதிரான தூக்கு தண்டனை தீர்ப்பை மதிமுக வரவேற்கிறது என வைகோ பேட்டி

கோவை, டிசம்பர் 13

சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளதை மதிமுக வரவேற்கிறது என கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வைகோ, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

கொளத்தூர் நகைக் கடை திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் மாநிலம் சென்ற மதுரவாயில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுட்டு கொள்ளப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. 

மதிமுக எப்போதும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளது. ஆனால், உடுமலை சங்கர் உள்ளிட்ட ஆணவ படுகொலைக்கு இந்த தீர்ப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இதனை மதிமுக வரவேற்கிறது. இதேப்போன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு அநீதியே அளிக்கப்பட்டுள்ளது. இவர்களது வழக்கில் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. தமிழக அரசு ஏற்கனவே முன்மொழிந்தது போல இவர்களை விடுவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...