அனைத்து உணவு வணிகர்களும் டிச.31-க்குள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்- ஆட்சியர்


கோவை, டிசம்பர் 13

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து உணவு வணிகர்களும் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்டாயம் உரிமம் அல்லது பதிவு செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006ன் கீழ் உணவு பொருள் வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் மற்றும் பதிவுகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவு பொருள் தயாரிப்பவர்கள், இருப்பு வைப்பவர்கள், விநியோகம் செய்வோர், உணவு விடுதிகள், ஓட்டல், பேக்கரிகள், தள்ளு வண்டிகள் உள்ளிட்ட உணவு விநியோகிக்கும் வாகனங்கள், இறைச்சி கடைகள் உணவு கையாளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்தல் வேண்டும்.

வருடாந்திர வியாபாரம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்வோர் ரூ.100 செலுத்தி அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையங்களின் மூலம் பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ரூ.12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்யும் தயாரிப்பாளர் தவிர பிற வியாபாரிகளுக்கு ரூ.2000 கட்டணமாகும். தயாரிப்பாளர்களுக்கு ரூ.3000 மற்றும் ரூ.5000 தயாரிப்பு அளவைப் பொறுத்து கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்களை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொண்டும், மாவட்ட நியமன அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். அல்லது, www.fssai.gov.in என்ற இணையதளத்திலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுமக்கள், உணவுப் பொருள் விற்பனை சம்பந்தமான புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், [email protected] என்ற இ-மெயில் வழியாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...