அனைத்து உணவு வணிகர்களும் டிச.31-க்குள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும்- ஆட்சியர்


கோவை, டிசம்பர் 13

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து உணவு வணிகர்களும் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்டாயம் உரிமம் அல்லது பதிவு செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006ன் கீழ் உணவு பொருள் வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் மற்றும் பதிவுகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவு பொருள் தயாரிப்பவர்கள், இருப்பு வைப்பவர்கள், விநியோகம் செய்வோர், உணவு விடுதிகள், ஓட்டல், பேக்கரிகள், தள்ளு வண்டிகள் உள்ளிட்ட உணவு விநியோகிக்கும் வாகனங்கள், இறைச்சி கடைகள் உணவு கையாளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்தல் வேண்டும்.

வருடாந்திர வியாபாரம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்வோர் ரூ.100 செலுத்தி அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையங்களின் மூலம் பதிவு செய்து உடனடியாக சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். ரூ.12 லட்சத்திற்கு மேல் வியாபாரம் செய்யும் தயாரிப்பாளர் தவிர பிற வியாபாரிகளுக்கு ரூ.2000 கட்டணமாகும். தயாரிப்பாளர்களுக்கு ரூ.3000 மற்றும் ரூ.5000 தயாரிப்பு அளவைப் பொறுத்து கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்களை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொண்டும், மாவட்ட நியமன அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம். அல்லது, www.fssai.gov.in என்ற இணையதளத்திலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பொதுமக்கள், உணவுப் பொருள் விற்பனை சம்பந்தமான புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், [email protected] என்ற இ-மெயில் வழியாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...