ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளத் தடை : மத்திய அரசு முடிவு

டிசம்பர் 15

இனி ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பும் பணிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. 

நாடு முழுவதும் 8 ஆயிரம் தனியார் வேன்கள் மூலம் தினமும் ரூ. 15,000 கோடி ரொக்கப்பணம் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பப் பயன்படுத்தப்படுகின்றன. தவிரக் கூடுதலாக ரூ. 5,000 கோடி, தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகள் மூலம் பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணம் கொண்டு செல்லும் வாகனங்களைக் குறி வைத்து தாக்கி கொள்ளையடிப்பது, வேனுடன் கடத்திச் செல்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நக்சல்கள் பாதித்த பகுதிகளில் இது மிகவும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்கான புதிய விதிமுறைகளைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இது குறித்து நிதித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், இனி தனியார் வாகனங்கள் இரவில் 9 மணிக்கு மேல் ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்வதை நிறுத்திட வேண்டும். நக்சல் பாதித்த பகுதிகளில் மாலை 6 மணிக்குள் பணம் நிரப்பிட வேண்டும். ஒரு வேனில் அதிகபட்சமாக ரூ. 5 கோடிக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகள், சி.சி.டி.வி. கேமிராக்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கருவிகள் பொருத்த வேண்டும். இதனை அனைத்து வங்கிகளின் செக்யூரிட்டி வாகனங்கள், தனியார் செக்யூரிட்டி வாகனங்களும் பின்பற்ற வேண்டும் என்ற வகையில் புதிய விதிமுறைகளை வகுக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...