விவசாயிகளுக்கான இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாட்டை துவங்கிய குமரகுரு கல்லூரி

கோவை, டிசம்பர் 19

விவசாயிகள் பயனடையும் வகையில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் அக்கல்லூரியில் இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவியுடன் கூடிய விவசாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக இணையத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் பயன்பாடு ஒன்றை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தினை அமெரிக்காவின் IEEE அறக்கட்டளை மற்றும் YELLOW TREE ACADEMY, சுற்றுச்சூழல் பசுமைப் பிரிவு ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.

வேளாண்மை என்பது பொறியியல் மாணவர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் கண்டுபிடித்து ஒரு உருமாற்றத்தை உருவாக்கும் பகுதியாகும். பயிர் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் ICT தீர்வுகளின் நன்மைகளைப் பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இக்கல்லூரியின் ஆராய்ச்சியாளர்களின் குழுவால் "நிலையான உணவு உற்பத்திக்கான ஸ்மார்ட் வேளாண்மை" என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.

பயிர் உற்பத்திக்கான சிறந்த நடைமுறைகளைப் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் விவசாயிகளுக்கு உதவுவதற்காகவும், வாடகைக்கு இயந்திர சாதனங்களும் பண்ணை உபகரணங்களும் கிடைப்பது குறித்து அறிந்து கொள்வதற்கும், அவற்றின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஒரு அடித்தளத்தை வைத்திருப்பதற்கும் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. "மண் உயிர்" என்ற இதன் பெயர் பூமிக்கும் உயிரினங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பைக் குறிக்கிறது. 

வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் டாக்டர். அருணாசலம், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆய்வு அறக்கட்டளை நிறுவனர் சாமிநாதன் சிவசேனாபதி, துடியலூர் கூட்டுறவு வேளாண்மை சேவை சங்க தலைவர் சுப்பய்யன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...