ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி - தமிழகத்திற்கு ரூ.4047 கோடி நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் கோரிக்கை

டிசம்பர் 19

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

ஒகி புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி, இன்று பகல் 2:20 மணியளவில் கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் குமரி வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், விவசாயிகள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். 

முன்னதாக, பிரதமர் மோடி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவுகளை ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு முடிந்த பின், விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, ஒகி புயல் சேத அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக ரூ. 4,047 கோடி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...