ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி - தமிழகத்திற்கு ரூ.4047 கோடி நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் கோரிக்கை

டிசம்பர் 19

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளைச் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

ஒகி புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி, இன்று பகல் 2:20 மணியளவில் கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் குமரி வந்த அவரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், விவசாயிகள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பிரதமர், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். 

முன்னதாக, பிரதமர் மோடி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவுகளை ஆய்வு செய்தார். அங்கு ஆய்வு முடிந்த பின், விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, ஒகி புயல் சேத அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக ரூ. 4,047 கோடி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...