புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, டிசம்பர் 20

பல்நோக்கு பண்ணைக்குட்டை வளர்ப்புத்திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது எனக் கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- மாநில அளவில் மீன்வளர்ப்புப் பரப்பினை அதிகப்படுத்தவும், மாவட்ட அளவில் மீன் உற்பத்தியை பெருக்கிடவும், உள்ளூர் பொதுமக்களின் மீன் உணவுத் தேவையை நிறைவேற்றிடும் வகையில், பல்நோக்கு பண்ணைக் குட்டை அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு, பரப்பில் 200 எண்ணம் 2500 சதுரமீட்டர் பரப்பளவில் புதிய மண்ணாலான மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்கவும் மற்றும் ஒருமுறை உள்ளீட்டுச் செலவினத்திற்கும் அலகு ஒன்றுக்கு ரூ. 1,28,500-ல் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

மீன்வளர்ப்பு குளங்கள் புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள் சொந்த நிலமும், குத்தகை நிலமெனில் 10 வருடக் குத்தகை ஒப்பந்தமும் வைத்திருக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விருப்பம் உள்ளவர்கள் ஈரோடு மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பப்படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி நாள் 27.12.2017 ஆகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மீன்வள உதவி இயக்குநர்,

எண்: 4 எஸ்.வி. காம்ப்லெக்ஸ் 2-ம் தளம், 

வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை ரோடு,

திண்டல் அஞ்சல், ஈரோடு 638 012.

தொலைபேசி எண்: 0424 2271912.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...