வால்பாறை அருகே யானைகளுக்கு இடையே மோதல் : பலத்த காயமடைந்த பெண் யானை மரணம்

கோவை, டிசம்பர் 20

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதியில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டுப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்தக் காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக உணவிற்காக அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை நோக்கி வரத்தொடங்கின. குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் சத்துணவுக்கூடம், ரேசன்கடை, குடியிருப்புகள் போன்றவற்றை சூறையாடுவதுடன், அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் நாசம் செய்து வந்தது. வனத்துறையினரும், பொதுமக்களும் இரவு முழுவதும் உறங்காமல் காட்டு யானைகளைக் காட்டுப்பகுதிக்குள் விரட்டினார்கள். இருப்பினும், அந்தக் காட்டு யானைகள் தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. 

தற்போது, யானைகளின் இனப்பெருக்க காலம் என்பதால், காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைவது சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி அருகில் பெண் யானை ஒன்று பலத்த காயங்களுடன் அடி வயிற்றில் குடல் வெளிவந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் மற்றும் வேட்டைத்தடுப்பு ஊழியர்கள் இறந்த யானையின் உடலைக் கைப்பற்றினர். பின்னர், வனவிலங்குகள் கால்நடை மருத்துவர் மனோகரன் இறந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தார். 

அதன் பின்னர் கால்நடை மருத்துவர் மனோகரன் கூறியதாவது: இறந்த பெண் யானைக்கு சுமார் 31 வயது இருக்கும். இப்போது யானைகளின் இனப்பெருக்க காலம் என்பதால் ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில் அது உயிரிழந்துள்ளது. ஆண் யானை தந்தத்தால் தாக்கியதால் அதன் அடி வயிறு கிழிந்து குடல் வெளிவந்தது. காயம் ஏற்பட்ட பெண் யானை ஓரிரு நாட்கள் உயிருடன் இருந்திருக்கலாம். அதன் பின்னர் ரத்தம் முழுவதும் போன பிறகு உயிரிழந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இறந்த பெண் யானையின் உடல் உடற்கூறு ஆய்வுக்குப் பின் வனவிலங்குகளுக்கு இரையாக வெட்டி அப்பகுதியிலேயே இடப்பட்டது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...