நீதிமன்றம் உத்தரவிட்டும் கைதியை விடுதலை செய்ய மறுப்பு : சிறை நிர்வாகம் மீது உறவினர்கள் புகார்

கோவை, டிசம்பர் 21

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி ஜப்ருவை சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜப்ரு என்கிற சையத் ஜாபர் அகமது, கடந்த 2009-ம் ஆண்டு அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், மதுரை மாவட்டத்தில் ஜெயபிரகாஷ் என்பவர் கொலை வழக்கில் ஜப்ரு ஆயுள் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், ஜப்ருவை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சகோதரி பவிதா சுல்தானா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அவரை விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுப்பதாக அவரது வழக்கறிஞர் பா.பா.மோகன் தெரிவித்தார். ஜப்ருவை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமெனவும், இல்லையெனில் நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...