முதலமைச்சரின் சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாற்றம் செய்த விவகாரம் : ஒருவர் கைது

டிசம்பர் 23

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சட்டைப்பையில் வைத்திருந்த ஜெயலலிதா படத்தை மாற்றி, பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதைப் போல சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயல் பாதிப்புகளை பார்வையிட சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அதிகாரிகள் வரவேற்றனர். இது தொடர்பான படங்கள் ‘வாட்ஸ்–அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.

பிரதமரை வரவேற்றபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சட்டைப்பையில் முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்திருந்தார். அந்தப் படத்தை வெளியில் இருந்து பார்த்தாலும் ஜெயலலிதா உருவம் தெரிந்தது.

இந்த நிலையில், அந்தப் படத்தில் ஜெயலலிதா உருவத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பிரதமர் மோடியின் படத்தை இடம்பெறச்செய்து சமூக வலைத்தளங்களில் வி‌ஷமத்தனமாக வெளியிடப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரான கனகராஜ் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டி என்பவரைக் கைது செய்தனர். அலெக்ஸ்பாண்டி, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...