குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிர் இழப்பை ஏற்படுத்தினால் 7 ஆண்டு சிறை தண்டனை : மத்திய அரசு புதிய சட்டம்

டிசம்பர் 23

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு, உயிர் இழப்பு நேரிட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு புதிய சட்டம் உருவாக்கியுள்ளது.

குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிர் இழப்பு ஏற்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதத் தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுகிறது.

குடிபோதையில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தை மாற்றி அமைத்து அதில் திருத்தம் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தது. 

அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு, உயிர் இழப்பு நேரிட்டால் 7 ஆண்டு சிறை தண்டனைக் கிடைக்கும் வகையிலான புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வழிகாட்டுதல் குழு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிக்கையை மாநிலங்களவையில் நேற்று சமர்பித்தது. இதில், 15 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, குடிபோதையில் வாகனத்தை இயக்கி உயிர் இழப்பு ஏற்படுத்தினால், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.

மேலும், 3-வது நபருக்கான காப்பீடு தொகையை பெரும்பாலான இரண்டு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பது இல்லை என்றும், இதனால், விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படும் நபர் உரிய இழப்பீடு பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. அவற்றையும் ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்படுகிறது. இனி வாகனங்கள் பதிவு செய்யப்படும் போது 3-வது நபருக்கான வாழ்நாள் காப்பீட்டுத் தொகை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மேலும் பல வரையறைகளும் அதில் இடம் பெறுகின்றன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...