ஈஷா அவுட்ரீச் சார்பில் நரசிபுரம் பள்ளி வளாக கட்டிடம் கட்டும் பூமி பூஜை மற்றும் மரம் நடுவிழா

கோவை, டிசம்பர் 25

கோவை, நஞ்சுண்டாபுரம் கிராமத்தின் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஈஷா அவுட்ரீச் மற்றும் கோயம்புத்தூர் பில்டர்ஸ் அன்டு கான்ட்ராக்ட் அஸோசியேஷன் இணைந்து புதிய அரங்கம் கட்ட பூமி பூஜை விழாவும், மேலும் 300 மரக்கன்றுகள் நடும் விழாவும் நஞ்சுண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் செந்தில் மற்றும் கோதலைவர் எஸ்.பி. அன்பரசன், ஈஷா யோகா மையத்தின் ஸ்வாமி அபிபாதா, கோயம்புத்தூர் பில்டர்ஸ் அன்டு கான்ட்ராக்ட் அஸோசியேஷன் தலைவர் சப்தரிஷி, செயலாளர் ஆர். கருணாநிதி, பள்ளி தலைமை ஆசிரியர் கே. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.



அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில் மெதுவாகக் கற்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஈஷா அவுட்ரீச்சினால் பணியமர்த்தப்பட்ட சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில் சிறப்பு பயிற்சி அளித்து அவர்கள் பள்ளி படிப்பை சுலபமாக கற்க உதவி வருகிறது. 10, 12-ஆம் வகுப்பில் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற இப்பயிற்சி அவர்களுக்கு உதவியாக அமையும். மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.



வாழ்வியல் கல்வி என்ற சிறப்பு பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நர்சரி உருவாக்கம், ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு, யோகா பயிற்சி போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது.

மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி விளையாட்டில் ஈடுபடவைத்து வருடம் ஒரு முறை விளையாட்டு போட்டிகள் வைத்து விளையாட்டை ஊக்குவித்தல் போன்றவை இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது. 

மேலும் இலவச கலை மற்றும் கைவினை பொருட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஓவியம், எம்பிராய்டரி செய்தல், பொம்மை செய்தல், கூடை பின்னுதல் போன்றவை இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9787774178, 9840872441 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...