ஈஷா அவுட்ரீச் சார்பில் நரசிபுரம் பள்ளி வளாக கட்டிடம் கட்டும் பூமி பூஜை மற்றும் மரம் நடுவிழா

கோவை, டிசம்பர் 25

கோவை, நஞ்சுண்டாபுரம் கிராமத்தின் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஈஷா அவுட்ரீச் மற்றும் கோயம்புத்தூர் பில்டர்ஸ் அன்டு கான்ட்ராக்ட் அஸோசியேஷன் இணைந்து புதிய அரங்கம் கட்ட பூமி பூஜை விழாவும், மேலும் 300 மரக்கன்றுகள் நடும் விழாவும் நஞ்சுண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் செந்தில் மற்றும் கோதலைவர் எஸ்.பி. அன்பரசன், ஈஷா யோகா மையத்தின் ஸ்வாமி அபிபாதா, கோயம்புத்தூர் பில்டர்ஸ் அன்டு கான்ட்ராக்ட் அஸோசியேஷன் தலைவர் சப்தரிஷி, செயலாளர் ஆர். கருணாநிதி, பள்ளி தலைமை ஆசிரியர் கே. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.



அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில் மெதுவாகக் கற்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஈஷா அவுட்ரீச்சினால் பணியமர்த்தப்பட்ட சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில் சிறப்பு பயிற்சி அளித்து அவர்கள் பள்ளி படிப்பை சுலபமாக கற்க உதவி வருகிறது. 10, 12-ஆம் வகுப்பில் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற இப்பயிற்சி அவர்களுக்கு உதவியாக அமையும். மேலும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.



வாழ்வியல் கல்வி என்ற சிறப்பு பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நர்சரி உருவாக்கம், ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு, யோகா பயிற்சி போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது.

மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி விளையாட்டில் ஈடுபடவைத்து வருடம் ஒரு முறை விளையாட்டு போட்டிகள் வைத்து விளையாட்டை ஊக்குவித்தல் போன்றவை இத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது. 

மேலும் இலவச கலை மற்றும் கைவினை பொருட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஓவியம், எம்பிராய்டரி செய்தல், பொம்மை செய்தல், கூடை பின்னுதல் போன்றவை இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்தான மேலும் தகவலுக்கு 9787774178, 9840872441 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...