பாக்., சிறையில் இருக்கும் ஜாதவுடன் குடும்பத்தினர் சந்திப்பு

டிசம்பர் 25

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவை இன்று அவரது மனைவி மற்றும் தாயார் ஆகியோர் சந்தித்தனர்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலூசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த மார்ச் மாதம் குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை நடைபெற்று வருவதால் அவரது மரண தண்டனையை ஐ.நா. நிறுத்தி வைத்துள்ளது. 

இதனிடையே, குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாய் அவரைக் காண வேண்டும் என்ற தொடர் முயற்சிக்கு இறுதியாக பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாக அந்நாடு தெரிவித்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாதவ், இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள அந்நாட்டு வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஜாதவின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் இந்திய தூதரகம் மூலம் இந்தியாவிற்கான துணை தூதர் ஜெ.பி.சிங் ஆகியோருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் ஜாதவை சந்தித்தனர். 

சிறையிலிருந்து, வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு ஜாதவ் அழைத்து வரப்பட்டதால் அவர் வரும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...