அணி தாவ இருக்கும் எம்எல்ஏக்களை அச்சுறுத்தவே, கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் : தினகரன் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

கோவை, டிசம்பர் 25

டிடிவி தினகரன் அணிக்கு வர நினைக்கும் எம்எல்ஏக்களை அச்சுறுத்துவதற்காகவே, தினகரன் ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார். 

கட்சியின் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், தினகரன் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், பாப்புலர் முத்தையா, புகழேந்தி (கர்நாடக மாநில செயலாளர்), நாஞ்சில் சம்பத், சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இது தொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கோவை சவுரிபாளையம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், சசிகலா படத்தை எடுத்ததில் இருந்தே அதிமுக அலுவலகம் செல்வதே இல்லை. இன்று கட்சியில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்கி இருக்கின்றனர். எங்களை கட்சியில் இருந்து நீக்கினால் மற்றவர்கள் பயந்து கொண்டு தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர் செல்வம் போன்றோர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் நட்பு பாராட்டி வருவதை போலவே, 2ஜி வழக்கில் திமுக வெற்றிக்கு தினகரன் வாழ்த்து கூறினார். ஆனால், தினகரன் திமுகவுடன் இணைந்து செயல்படுவதாக பேசிவருகின்றனர். அதிமுக கட்சியை நடத்தத் தகுதியானவர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கிடையாது. சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் ஆகியோரால் மட்டுமே இந்தக் கட்சியை வழிநடத்த முடியும். 

டிடிவி தினகரன் மாயமான் அல்ல கவரிமான். ஆர்.கே. நகரில் தினகரன் தோற்று போயிருந்தால் திமுக வெற்றி பெற்று இருக்கும். பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போன்றவர்களின் காலில் டிடிவி தினகரன் விழவில்லை. அதிமுகவினர் அனைவரும் டிடிவி தினகரன் பின்னால் அணிவகுக்க வேண்டும். உற்சாகத்துடன் இருந்த அதிமுக அலுவலகம் தற்போது எழவுவீடு மாதிரி ஆகிவிட்டது. கட்சியில் இருந்து தங்களை நீக்கியதைப் பற்றி கவலையில்லை. இவர்களுடன் இருப்பதுதான் கேவலமானது. 

ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கொடுத்த புகழேந்தியை துரோகிகள் கட்சியில் இருந்து நீக்கி இருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தினகரன் பின்னால் அணி திரள வேண்டும். ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கப்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு காரணமே அமைச்சர் ஜெயக்குமார்தான். திமுகவை எதிர்க்க தகுதியான நபர் டிடிவி தினகரன் மட்டுமே. 

கர்நாடக மாநிலச் செயலாளராக முறைப்படி ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டவன் நான். என்னை யாராலும் நீக்க முடியாது. சிறையில் இருந்த சசிகலா நேற்றுதான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். பாஜகவினரும், பிரதமர் மோடியும் நேற்றைய தேர்தல் வெற்றியின் மூலம் உண்மையை தெரிந்து கொண்டு இருப்பார்கள். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...