டுவிட்டரில் டிடிவி தினகரனுக்கு வாழ்த்து: மறுப்பு தெரிவித்து அமைச்சர் உதயகுமார் விளக்கம்

டிசம்பர் 26

ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தினகரன் வீட்டுக்குச் சென்ற வேலூர் எம்.பி.செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, தினகரன் இல்லத்திற்கு சென்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் நடிகர் மயில்சாமியும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பலர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து கூறினர். 

இதனிடையே, ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு உள்ளபடியே மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் வாழ்த்துகள் அவரோடுதான் இருக்கிறது. வாழ்த்துகள் சார் என டுவிட்டரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. 

இந்நிலையில், தினகரனுக்கு வாழ்த்துக் கூறியதாக வெளியாகியுள்ள டுவிட்டர் பதிவிற்கு அமைச்சர் உதயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், டுவிட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த டுவிட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை ரத்து செய்யுமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை. என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...