தமிழகத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும்- தினகரன் ஆதரவாளர் புகழேந்தி

கோவை, டிசம்பர் 26

தமிழகத்தில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும் என்றும், அந்த மாற்றத்திற்காகத்தான் காத்திருப்பதாகவும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



கோவை, குனியமுத்தூரில் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 

தமிழகத்தில் எந்த நேரமும் பெரிய மாறுதல் ஏற்படும். அந்த மாற்றத்திற்காகக் காத்திருக்கின்றோம். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்கின்றோம் என திருமாவளவன் சொல்லி இருக்கின்றார். தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் தமிழக அமைச்சர்கள் பேசுகின்றனர். 

போயஸ் கார்டன், கருணாநிதி இல்லம் என அனைவரின் வீட்டையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நாம் யாரும் பார்த்திராத ஜெயக்குமாரின் வீடு மிகப்பெரிய மன்னர் மாளிகை போன்று இருக்கும். ஒரு தெருவில் ஆரம்பித்து மற்றொரு தெருவில் முடியும். இதை எப்படி அவர் சம்பாதித்தார். 

ஓரே ஒரு இடைத்தேர்தலில் ஜெயித்ததற்கு பைத்தியம் பிடித்தவர்களை போல அதிமுக அமைச்சர்கள் புலம்புகின்றனர். முதலமைச்சராக தினகரனை பார்க்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கீழ்த்தரமாகப் பேசுகின்றார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை மாலுமிகளாக கொண்ட கப்பல் மூழ்கி விட்டது. அதில் இருந்து ஓ.எஸ். மணியன் வெளியே வர வேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மதுசூதனனை எங்களிடம் அனுப்பட்டும். அதே தொகுதியில் எங்களால் மதுசூதனனை ஜெயிக்க வைக்க முடியும். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரசியல் அனாதை.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...