எம்எல்ஏ-வாக டிச.,29-ம் தேதி பதவியேற்கிறார் டிடிவி தினகரன்

டிசம்பர் 26

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் வரும் 29ம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொள்கிறார். தலைமை செயலகத்தில் மதியம் 1.30 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதல் முன்னிலை வகித்து வந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் எல்லா சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர், 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் கூடுதலாகவே பெற்று வென்ற அவர் தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முத்திரை பதித்தார்.

தினகரனின் வெற்றி தமிழக அரசியலில் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில், வரும் 29-ம் தேதி அவர் முறைப்படி எம்எல்ஏ-வாக பதவியேற்க உள்ளார். மதியம் 1.30 மணிக்கு சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார். பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சட்டசபைக்குள் முதன் முறையாக அவர் ஆர்.கே. நகர் எம்எல்ஏ-வாக நுழைய உள்ளார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...