கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம்

கோவை, டிசம்பர் 27

திருப்பூர் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர். 

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (57). இவர் ரத்திஸ் (36) மற்றும் ரூபேஸ் (34) என்ற இருமகன்களின் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருந்து கார் மூலமாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

இதே போல் கோவியில் இருந்து கரூர் சாலையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சபாபதி (48) என்பவர் இயக்கிவந்தார். 

அந்த கார் வெள்ள கோவிலை அடுத்த ஓலப்பாளையம் என்ற பகுதி அருகே சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த லார் மீது மோதியது. 

இந்த விபத்தில் காரில் பயணித்த லட்சுமி (57), ரத்தீஸ் (36) சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சபாபதி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்த ஓலப்பாளையம் போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரூபேஸ் (34) அவரது மனைவி சுமதி (32), குழந்தைகள் தீப்ஷிதா (7), லட்சுமி (2), அபிதேஷ் (7), திரோஷ் (5), மற்றும் ரத்தீஸ்-ன் மனைவி வீணா (30) ஆகிய 7 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். 

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரூபேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...