வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கோவை, டிசம்பர் 27

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுவன மேலாண்மை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வனஅலுவலர் ந.சதீஸ் மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழு உறுப்பினர்கள், அனைத்து திட்ட கிராம வனக்குழு உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில், ஆட்சியர் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மாவட்ட அளவிலான கூட்டுவன மேலாண்மை குழுவின் மூலம் வனப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காரமடை பகுதிகளில் உள்ள வனகிராமங்களான சேத்துமடை, பூச்சிமரத்தூர், நெல்லிமரத்தூர், இருளர்பதி, பாறையன்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் 63 பயனாளிகளுக்கு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நம்பர் 4 வீரப்பாண்டி பகுதிக்கு அருகாமையில் பூலப்பதி கிராமத்தில் ரூ. 9.19 லட்சம் மதிப்பில் சூரியஒளியில் இயங்கும் மோட்டார் வசதி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.  

தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ்கள் உரிய விசாரணையின் பேரில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளருக்கம்பாளையம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரண், கிணறு கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், புதிய நியாயவிலைக் கடை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்துப்பட்டுள்ளது. தேக்கம்பட்டியில் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் 20 சோலார் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நெல்லிமலையில் இருந்து வரும் உபரிநீரை தடுப்பணைகட்டி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

தொடர்ந்து, மலைவாழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாத வகையில், அகழிகள் ஏற்படுத்துதல் தொலைதூர வெளிச்சம் தரக்கூடிய டார்ச்லைட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மலைவாழ் மக்கள் சுயசார்பு அடையும் வகையில், சிறுவன சாகுபடி மேற்கொள்ளவும், தங்களால் உற்பத்திசெய்யக்கூடிய கைவினைப் பொருட்களை சந்தைபடுத்தவும் வனஅலுவலர்கள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழுவினரால் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்து உரியப் பரிசீலனைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...