நீலகிரி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: மின்சாரம் தாக்கி விவசாயி பலி, அ.தி.மு.க வினர் மீது பொது மக்கள் கடும் அதிருப்தி



நீலகிரி, டிசம்பர் 28

நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயக்கூலி ஒருவர் பலியாகியுள்ளார். 

நீலகிரி மாவட்டம் கொடப்பமந்து பகுதியை சேர்ந்தவர் பாபு (48). விவசாயக் கூலியான இவர் லாரியின் மூலம் தோட்டத்திற்கு வந்த உரத்தை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பகுதியில் அ.தி.மு.க.வின் கொடி இரும்பு கம்பியில் கட்டி பறக்கவிடப்பட்டிருந்தது. 

அந்த இரும்புக்கம்பி மின்சார ஒயரில் உரசிக்கொண்டிருந்தது. 

இதை கவணிக்காத பாபு அந்த கொடிக்கம்பத்தின் மீது சாய்ந்தார். 

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தார். 

விவசாயக்கூலியின்  உயிரிழப்புக்கு ஆளும் கட்சியினரின் அலட்சியமே காரணம் என்றும், உயிர்பலிக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடப்பமந்து பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதன்பிறகே, பாபு-வின் மரணம் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 3-ம் தேதி கோவையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதற்காக அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிரலைகளை உருவாக்கியது. 

சாலையை ஆக்கிரமித்து அலங்கார நுழைவு வாயில்கள் அமைத்ததே இவ்விபத்திற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், டிப்பர் லாரி மோதியதால் தான் ரகுபதி பலியானார் என்று கூறி வழக்குப் பதிந்தது கோவை மாநகர காவல்துறை. 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் போது கோவையில் வாலிபர் பலியானது போல், மீண்டும் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் என்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் என்ற பெயரில் அலட்சியப்போக்காக செயல்பட்டு, கோவை மற்றும் நீலகிரியில் இரண்டு உயிர்களை காவு வாங்கி விட்டனர் அ.தி.மு.க. வினர் என்று கடுமையான கண்டனங்கள் மக்களிடையே எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...