நீலகிரியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டிசம்பர் 30

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது, பல்வேறு அரசு துறைகளில் முடிவுபெற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.



உதகையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் கலந்து கொள்வதற்காகச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோத்தகிரி சந்திப்பில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியினைப் பார்வையிட்டார். பின்னர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்ட காய்கறி மற்றும் பழக்கண்காட்சியில், காய்கனிகளால் உருவாக்கப்பட்ட எம்ஜிஆர் திருவுருவத்தை கண்டார்.



உதகை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளில் முடிவுபெற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில், ”நீலகிரி அகவை 200” குறுந்தகட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கிக் கவுரவித்தார்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...