ரஜினியின் அரசியல் 'எண்ட்ரி': கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்

கோவை, டிசம்பர் 31

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து கோவையில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

சுமார் 22 ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த்  அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனிக்கட்சி துவங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது இந்த முடிவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.

முன்னதாக வ.உ.சி. மைதானத்திலிருந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற கொடியுடன்  ஊர்வலமாக வந்த ரசிகர்கள் செஞ்சிலுவை சங்கம் முன்பாக பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

இதேபோல் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்திய ரசிகர்கள் கோவில் பிரகாரத்தில் அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இது குறித்து இந்துமக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜீன் சம்பத் கூறுகையில், 'போலியான அரசியல்  முடியட்டும் ஆன்மீக அரசியல் விடியட்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வரவேற்கத்தக்கது.  தவமாய் தவமிருந்த ரசிகர்களுக்கு அருள் வழங்கியுள்ளார் ரஜினிகாந்த். 

மேலும் ஆன்மீக அரசியல் மலருவதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அவருக்கு உறுதுணையாக இந்து மக்கள் கட்சி இருக்கும்' என்றார்.

கோவை மாவட்ட ரசிகர் மன்ற  தலைவர் கதிர்வேல் பேசுகையில், '35 ஆண்டுகள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். அவர் அரசியலுக்கு வந்தால்தான் மாற்றம் ஏற்படும். இன்றையை அரசியல் நிலையின் தன்மையை காவல்படையின் மூலம் இந்த தேசத்திற்கு மீண்டும் விடுதலை பெற்று தருவார். 

ஆன்மீக அரசியல் என்பது மதம் சார்ந்த அரசியல் அல்ல. தெய்வீக , தெய்வ நம்பிக்கையுடைய அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து தேசத்தின் வளர்ச்சிக்கு பாடுபட  உதவியாக இருக்கும். தெய்வத்தால் நாடு தூய்மை அடையும், தெய்வம் போன்ற மக்கள் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள்' என்றார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...