உயர்கல்வித்துறை ஊழல் விவகாரம் : சி.பி.ஐ., விசாரணை கோரி சுயநிதி தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது விவகாரத்தில் அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவலையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என சுயநிதி தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை : பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது விவகாரத்தில் அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு தொடர்பிருப்பதாக வெளியான தகவலையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என சுயநிதி தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுயநிதி தனியார் கல்லூரி நிர்வாகிக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் கலீல் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக  சுயநிதி தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பு தலைவர்  ஏ.எம்.எம். கலீல்,  செயலாளர் அஜித் குமார் லால் மோகன், பொருளாளர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக கூட்டமைப்பின் உறுப்பினர் நித்தியானந்தன், உறுப்பினர்கள் ராஜ்குமார், வெங்கடாச்சலம், முத்துராஜ் மற்றும் ஹேமாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் அந்த அமைப்பின் தலைவர் கலீல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, அவர் பேசுகையில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த விவகாரத்தில் துணைவேந்தர் மீது அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கின்றது என்பதைப் பார்த்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் ஆளுநர் ஆகியோரை நேரில் சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். 

பல்கலைக்கழகத்தின் முறைகேடு தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆசிரியர் பணிநியமனம் மற்றும் சேர்க்கை போன்ற விவகாரங்களில் தலையீடு இருந்தது. புதிய விதிகளைப் போட்டு சுயநிதி கல்லூரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது. துணைவேந்தர் கணபதி விவகாரத்தில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பங்கு என சொல்லப்படுவதால் இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார். 

Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...