ரயில்வே துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க நடவடிக்கை : சிறப்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ரயில்வேத்துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வேத்துறையில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே தனது ஊழியர்களிடையே நேர்மை நிலவுவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. சமூக ஊடகங்கள் மூலமாகவும், ஊடக விளம்பரங்கள் மூலமாகவும் தனது எந்தஒரு மட்டத்தில் இருக்கும் ஊழியரும் ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக அது குறித்து புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இத்தகு புகார்களைத் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்களையும் ஏற்பாடு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில், ரயில்வே ஊழியர்கள் பற்றிய லஞ்ச மற்றும் ஊழல் புகார்களை விஜிலன்ஸ் துறை உதவி எண் 155210 மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிவிக்கலாம்.   

2018 பிப்ரவரி முதல் தேதி துவங்கி தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா. கண்காணிப்பில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரயில் நிலையங்கள், ரயில்கள், ரயில்வே அலுவலகங்கள், பார்சல் அலுவலகங்கள், முன்பதிவு அலுவலகங்கள், உணவகங்கள், போன்ற இடங்களில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின், உதவி ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் எம். சிவதாஸ், உதவி வணிக மேலாளர் எம். ஷாஜஹான் ஆகியோர் தலைமையிலான சிறப்புப் படையினர் திடீர் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதில், அனுமதியின்றி உணவுப் பொருட்கள் விற்ற பலபேர் பிடிபட்டதுடன், அவர்கள் விற்ற உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  

ரயில் பயணிகளிடையே இது குறித்து உரையாடிய சேலம் கோட்ட மேலாளர் விஜிலன்ஸ் உதவி தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி சேலம் கோட்டத்தில் நடைபெறும் எந்த ஒரு ஊழல் மற்றும் லஞ்ச நிகழ்வுகள் பற்றி புகார் கொடுக்க முன்வருமாறு கேட்டுக் கொண்டதுடன், அத்தகு புகார்கள் நிரூபிக்கப்பட்டால், தக்க தண்டனை சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியருக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.  இத்தகு சிறப்பு விஜிலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்வுகள் சேலம் கோட்டத்தில் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...