குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக புகார்: தி.மு.க., எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எம். நகரில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து, தி.மு.க., எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஜி.எம். நகரில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரையடுத்து, தி.மு.க., எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

மாநகராட்சியின் 74-வது வார்டு ஜி.எம். நகர் மற்றும் கோட்டை புதூர் பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாகப் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் ஜி.எம். நகருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும், நேரில் வரவழைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜி.எம். நகர், சாரமேடு, மஜித் காலனி பகுதிகளில் சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது தொடர்பாக ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். செயலற்ற இந்த மாநகராட்சி நிதி இல்லாமல் தத்தளித்து கொண்டுள்ளது. ஏற்கனவே, பணிகள் செய்த ஒப்பந்ததாரர்களுக்கும் பணம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. 



மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசின் நிதியும் பெற முடியாமல் இருக்கின்றது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களை மிரட்டிக் கட்டாயப்படுத்தி நிதி வசூல் செய்து வருகின்றது. இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்," என்றார்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...