சம்பிரதாயமாக நடத்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் வெளியீட்டு விழா

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த புத்தகத்தை வெளியிடாமல், புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர்.

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த புத்தகத்தை வெளியிடாமல், புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்றனர். 



திருப்பூர் மாநகராட்சியின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆணையர் அசோகனிடம், உதவி ஆணையரிடம் சந்தானநாராயணன் பட்ஜெட் புத்தகத்தை வழங்கினார். இதில், மூலதன வரவுகள் ரூ. 1,171 கோடி என்றும், வருவாய் மற்றும் மூலதன செலவுகள் ரூ. 1,165.67 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்ஜெட்டில் ரு. 5.87 கோடி உபரி நிதி உள்ளதாக ஆணையர் அசோகன் தெரிவித்தார். 

பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சி இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரென 11.15 மணிக்கு அழைத்து 11.20 மணிக்கு பட்ஜெட் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதனால், முழு சேகரிக்க முடியாமல் செய்தியாளர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் குறித்து நிதிநிலை அறிக்கை விளக்க புத்தகமானது முழு விவரமாக வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட் முழு விவர புத்தகத்தை யாருக்கும் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மறைத்து எடுத்து சென்று விட்டனர். அதில், உள்ள பாதகமான விஷயங்கள் வெளிவராமல் இருப்பதற்காக பட்ஜெட் புத்தகம் மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 



நடப்பாண்டில் திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் வீட்டு வரி, உள்ளிட்ட வரியினங்கள் 400 முதல் 500 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், அதுகுறித்த விரிவான விவர அறிக்கையை தராமல் மாநகராட்சி ரகசிய பட்ஜெட்டை நூதனமாக அறிவித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சியில் தனி அதிகாரிகள் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதால் கேட்பதற்கு ஆள் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...