காவிரி விவகாரம்: அ.தி.மு.க., சார்பில் ஏப்., 2-ல் உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி, மதுரை ரிங்ரோடு அம்மா திடலில் 120 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இந்த உண்ணாவிரத போராட்டம் இந்தியாவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியில் உரிமையை அ.தி.மு.க., ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடக்கும். அ.தி.மு.க.வின் இந்த அறப்போராட்டத்தில் மக்கள் பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...