மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை தாக்கியதில் 6 ஆடுகள் பலி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். 

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் அண்மைக் காலமாக வனவிலங்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. 



இந்நிலையில், நேற்று நள்ளிரவு மேடூர் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை சிவக்குமார் என்பவரது தோட்டத்தினுள் நுழைந்துள்ளது. அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை சிறுத்தை தாக்கி உள்ளது. மொத்தம் ஆறு ஆடுகளை கழுத்து பகுதியில் கடித்து குதறிவிட்டு, சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. ஆடுகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் ஆடுகள் துடிதுடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காரமடை வனத்துறையினர் ஆடுகள் உயிரிழப்புக்கு காரணம் சிறுத்தையா அல்லது வேறு விலங்குகளாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது :- சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தால் நாங்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளோம். கால்நடைகளை வளர்க்க முடியவில்லை. வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை வேண்டும். என்றனர். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...