"செய்கை மொழிக்கென தனி அடையாளம் உள்ளது"

கோவை : வாய் மற்றும் காது ஊனமுற்றோர்கள் பயன்படுத்தும் செய்கை மொழிக்கு தனி அடையாளம் இருப்பதாக சென்டம் ஜி.ஆர்.ஓ. இனிஷியேடிவின் இணை துணைத் தலைவர் டாக்டர் அலிம் சாந்தினி கூறினார்.

கோவை : வாய் மற்றும் காது ஊனமுற்றோர்கள் பயன்படுத்தும் செய்கை மொழிக்கு தனி அடையாளம் இருப்பதாக சென்டம் ஜி.ஆர்.ஓ. இனிஷியேடிவின் இணை துணைத் தலைவர் டாக்டர் அலிம் சாந்தினி கூறினார். 



காது கேளாதோர் அறக்கட்டளை, ரத்தினம் கல்லூரி, சிம்பிள் சொல்யூசன்ஸ் மற்றும் ஃபேமிலி கேர் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து 'நிலையான செய்கை மொழி' என்ற தலைப்பில் தென்னிந்திய அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர். இதில், சென்டம் ஜி.ஆர்.ஓ. இனிஷியேடிவின் இணை துணைத் தலைவர் டாக்டர் அலிம் சாந்தினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். 



இதைத்தொடர்ந்து, அவர் பேசியதாவது:- செய்கை மொழிக்கு தனி அடையாளம் உள்ளது. இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே செய்கை மொழித் திறனை அதிகரிக்கச் செய்ய இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் தங்களது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள செய்கை மொழியே காரணியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 



நிகழ்ச்சியில் ஃபேமிலி கேர் தொண்டு நிறுவன தலைவர் ரேணுகா ரமேஷன் சிம்ப்ளிசிட்டியிடம் கூறுகையில், "செய்கை மொழி காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு முதன்மையாக உள்ளது. கேட்கும் திறன் குறைவாக இருப்பவர்களைப் புரிந்து கொள்வதற்கு, இந்த மொழி உதவியாக உள்ளது. இந்த மொழிக்குப் பிற மொழிகளைப் போல இலக்கணம், வாக்கிய அமைப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லை. இருப்பினும், இந்த மொழி பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே உள்ளது. ஆசிரியர்கள் செய்கை மொழியைக் கற்றுக் கொண்டால் மட்டுமே, வாய் மற்றும் காது ஊனமுள்ள மாணவர்களுக்கு கல்வியை முழுமையாகக் கொண்டு போய் சேர்க்க முடியும்," என்றார். 



தென்னிந்தியா முழுவதும் சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், இந்தியா டெஃப் நியூஸ் என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...