மதநீர் சுரந்ததால் கும்கி யானைகள் முகாம்களுக்கு திரும்புவதில் தாமதம்

கோவை: கோவை மாவட்டம் சாடிவாயல் யானைகள் முகாமில் பயிற்சி பெற்று வந்த இரு கும்கி யானைகள் அதன் இருப்பிடத்திற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் சாடிவாயல் யானைகள் முகாமில் பயிற்சி பெற்று வந்த இரு கும்கி யானைகள் அதன் இருப்பிடத்திற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பாரி (37), சுஜய் (45) ஆகிய யானைகள் கும்கிளாக தங்களது சேவையைச் செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, இரு யானைகளும் ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, கோவை மாவட்டம் சாடிவயலில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் பாரி மற்றும் சுஜய் உள்ளிட்ட பல்வேறு யானைகள் கலந்து கொண்டன. 48 நாட்கள் பயிற்சி முகாம் கடந்த புதன்கிழமையே முடிவடைந்தது. இதில், கலந்து கொண்ட யானைகள், அவற்றின் இருப்பிடத்திற்கு திரும்பிய நிலையில், நேற்று கும்கி யானை பாரி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது, பாரிக்கு மதநீர் திடீரென சுரந்தது. இதனால், அந்த யானை காப்பகத்திலேயே தங்க வைக்கப்பட்டது. மேலும், கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகே, அதன் காப்பகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றொரு கும்கி யானையான சுஜய் இன்று தேக்கம்பபட்டி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே, சாடிவயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு கும்கி யானைகளுக்கு பதிலாக முதுமலையில் இருந்து சேரன் மற்றும் ஜான் ஆகிய கும்கி யானைகள் பதிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...