கோவையில் 8-வது ரவுண்ட் டேபிளாக இணைக்கப்பட்டது 'ஸ்பார்க்'

கோவை: இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலனுக்காக செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் இந்தியாவில், 'ஸ்பார்க்' என்ற பெயரில் மேலும் ஒரு ரவுண்ட் டேபிள் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை: இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலனுக்காக செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் இந்தியாவில், 'ஸ்பார்க்' என்ற பெயரில் மேலும் ஒரு ரவுண்ட் டேபிள் உருவாக்கப்பட்டுள்ளது.

இலாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் ரவுண்ட் டேபிள் அமைப்பில் ஏற்கனவே 7 டேபிள்கள் (அமைப்புகள்) உள்ளன. இவை ஒருங்கிணைந்து இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தினரின் நலன்களுக்காகப் பாடுபட்டு வருகின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுடன் இணைந்து பின்தங்கிய மாணவர்களுக்கான உதவிகள், பள்ளிகளுக்கு இலவச கழிப்பறைகள் மற்றும் இயற்கை சீற்ற மீட்பு உள்ளிட்ட பல்வேறு சமூக நலன்களில் அக்கறை காட்டி வருகின்றன.



இந்த நிலையில், பாலக்காட்டைச் சேர்ந்த 'ரவுண்ட் டேபிள் 81' சார்பில் ஸ்பார்க் என்ற அமைப்பு, கோவையில் உள்ள ரவுண்ட் டேபிள் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது, கோவையில் சேர்க்கப்பட்ட 8-வது ரவுண்ட் டேபிள் ஆகும். இதன் தொடக்க நிகழ்ச்சியில், ரவுண்ட் டேபிள் இந்தியாவின் தேசிய உறுப்பினர்கள் மற்றும் திரைப்பட நடிகர் நரேன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஸ்பார்க்கின் தலைவராக பன்கஜ் கபூரும், செயலாளராக சுஜய் நிலையம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



8-வது ரவுண்ட் டேபிளாக இணைக்கப்பட்டது 'ஸ்பார்க்', சிறுதுளி அமைப்புடன் இணைந்து மரம் நடுதல், குளங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றையில் ஈடுபட உள்ளது. முதற்கட்டமாக, மரம் நடுவதற்கு மட்டும் ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்தங்கியவர்கள், ஆதரவற்றோர், தாய் அல்லது தந்தையை இழந்த பெண் குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றிற்கு ரூ. 4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சிகிச்சைக்காக ரூ. 35,000 ஆற்றல் அறக்கட்டளைக்கு ஸ்பார்க் நன்கொடையாக வழங்கியது.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...