தொடர் விடுமுறையால் நீலகிரியில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீலகிரி : தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். 

உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா என பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த மூன்று நாட்களில் அந்த சுற்றுலா தளங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 



உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் கடந்த மூன்று நாட்களில் 42,578 பேர் வருகை புரிந்துள்ளனர். மேலும், அரசு ரோஜா பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்காவிற்கு கடந்த முன்று நாட்களில் 15,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். சமவெளி பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து குவிந்ததால் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...