உதகையில் சுற்றுலா பயணியின் கார் மீது மரம் விழுந்து விபத்து

நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார். 

நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் நாள்தோறும் பேருந்துகள் வந்து செல்கின்றன. கேரளா, கர்நாடகா வாகனங்கள் உதகை தலைகுந்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் 100-க் கணக்கான வாகனங்கள் உதகையை வந்தடைகின்றன.

இந்நிலையில் கேரளாவிலிருந்து தலைகுந்தா, பாரதியார் நகர் பகுதியில் கேரளா மாநில கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் மீது அங்கிருந்த பழமையான மரம் ஒன்று விழுந்தது. இந்த விபத்தில் வாகன ஓட்டுநர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



மேலும், மரம் மின் கம்பி மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இனி வரும் மழைக் காலங்களுக்குள் சாலையோரம் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றினால் மட்டுமே பாதுகாப்பான பயணம் செய்ய முடியும் என்பதே வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...