தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை திரும்ப பெறக் கோரி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை திரும்ப பெறக் கோரி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



25 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி எம்.பி.பி.எஸ் படித்தால் மட்டும் தான் அலோபதி மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். மசோதாவின் படி, சித்தா, ஆயுர்வேதம் பயின்றவர்களும் தனி கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு எந்த வித தேர்வுமின்றி அலோபதி மருத்துவர்களாக செயல்படலாம்.

மத்திய அரசின் இந்த செயல்பாட்டுக்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.தேசிய மருத்துவ ஆணையத்தில் உள்ள சில சரத்துகளை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர். ரவிசங்கர் கூறுகையில், "மருத்துவ துறையில் முன்னேறி வரும் இந்தியாவில் மாற்று மருத்துவர்களை அலோபதி மருத்துவர்களாக்கும் முயற்சி தவறான முன்னுதாரணமாக உள்ளது. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் அரசின் தவறான இந்த கொள்கையை அமல்படுத்த நாங்கள் விடமாட்டோம்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும். இதனால் மருத்துவர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் இடையூறுகள் ஏற்படும். எங்களின் நியாயமான ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...