கேரள பந்த் காரணமாக உக்கடத்தில் பேருந்துகள் நிறுத்தம் : பயணிகள் தவிப்பு

கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 



நிரந்தரத் தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பாஜ.க, தொழிற்சங்கம் தவிர அனைத்து தொழிற்சங்கங்களும், 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி, கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.



முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி கேரளாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக, குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் தமிழக பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. 



இதேபோல, கோவையிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு, வேலந்தாவளம், அட்டபாடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சொடி காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



மேலும், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் கோவை மாவட்டம் மற்றும் கேரள எல்லையான வாழையார் சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டன. இதனால், அப்பகுதியில் போக்கவரத்து நெரிசலாகக் காணப்பட்டது. 



Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...