கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீசார் குவிப்பு : மீண்டுமொரு ஜல்லிக்கட்டு மாதிரியான போராட்டத்தை தடுக்க நடவடிக்கை

கோவை : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், கோவை வ.உ.சி. மைதானத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை : காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், கோவை வ.உ.சி. மைதானத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 



காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்டா பகுதியில் காவிரி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தேனி பகுதியில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அரசியல் நோக்கத்திற்காக ஒருதலைபட்சமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோவையில் உள்ள அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நாளை முதல் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். 

இதனால், நகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து, கோவையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. மைதானம் பிரதான போராட்ட அரங்காக மாறிவிட்டது. பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கோவையின் பங்கு பெரும் அதிகம். இந்தப் போராட்டத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர். 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற எழுச்சிப் படையைக் காண கோவை மாநகர போலீசார் தயாராக இல்லை. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று வ.உ.சி. மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தடுப்புகளை அமைத்து வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. 

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...