காவிரி மேலாண்மை கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடல்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.



கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்கக் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர், மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை மாவட்ட ஹோட்டலியர்ஸ் கூட்டமைப்பு சார்பாக கோவையில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இன்று 180-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளது.

காலை 5 மணி முதல் மதியம் மதியம் 1 மணி வரை கடையடைப்பு இருக்கும் என்று ஹோட்டலியர்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கோவை மாவட்ட அந்த அமைப்பின் செயலாளர் ஆர்.பாலசந்தர் கூறுகையில், "விவசாயிகளிடம் பொருட்களை பெற்று தான் உணவு விடுதிகள் செயல்படுகின்றன. விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாங்கள் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். விவசாயம் இல்லாமல் விவசாய சார்ந்த காய்கறிகள், அரிசி போன்ற பொருட்கள் விலையேறினால் உணவுகளின் விலையும் அதிகரிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

இந்த போராட்டம் காரணமாக வெளியூர்களில் இருந்து கோவை வருபவர்கள் மற்றும் கோவையில் பணி புரிபவர்கள் காலை உணவுக்காக சிரமப்பட்டனர். 

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...