நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம் : போராட்ட களத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்று கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்று கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 



காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 

கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பாக அ.தி.மு.க. சார்பில் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு செயல்திட்டங்கள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை சண்முகம், சூலூர் கனகராஜ், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு, மற்றும் முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

போராட்டத்தின் போது அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த போராட்டம் உணர்வுப் பூர்வமாகவும், எழுச்சிமிக்க போராட்டமாகவும் நடைபெற்று வருகிறது. உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை அமைக்கும் வரை ஓய மாட்டோம். தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இத்தனை பிரச்சனைகளுக்கும் தி.மு.க தான் காரணம். அவர்கள் வானளாவிய அதிகாரத்தில் இருந்த போதும் மேலாண்மை வாரியம் அமைக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அரசியல் ஆதாயத்திற்காக போராடி வருகின்றனர். சாதனை படைக்கும் வகையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடைபெறுகிறது. அடுத்த கட்ட முடிவுகள் குறித்து கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுப்பார்கள்." என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...