காவிரி விவகாரம் : திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் தலைமையில் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


திருப்பூர் : காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும், மத்திய அரசு  காவிரி மேலாண்மை அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன்படி, திருப்பூரில் ரயில் நிலையம் முன்பு தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 



அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "காவிரி பிரச்சினைக்காக மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி உரிமையை நிலை நாட்டியவர் ஜெயலலிதா. அதேவழியில் நடைபெறும் இந்த ஆட்சியும் காவிரி உரிமையை மீட்டெடுக்கும். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தால் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை அமைக்கும்." என்றார். 



இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தில் 800 மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளது இதனால் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...