திருச்சியில் நாளை நடக்கும் கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை

திருச்சி : திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி : திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த திருச்சி பொன்னமலையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருந்தார். இதற்காக, அவர் இன்று காலை சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பை திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை எந்தவிதமான கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

இந்த உத்தரவால், நாளை நடைபெற இருந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடக்குமா..? என சந்தேகம் எழுந்தது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்டதால், கமல்ஹாசனின் கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் ஆணையர் கூறியுள்ளார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...