காவிரி விவகாரம் : கோவை ரயில்நிலையத்தை முடக்கிய அரசியல் கட்சிகள்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க., தந்தை பெரியார் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள், போலீசாரின் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் புகுந்தனர்.

2-ம் நடைமேடையில் வந்த ரப்திசாகர் விரைவு ரயிலை மறித்த போராட்டக்காரர்கள், ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தி.மு.க.வின் மகளிர் அணியினர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஏராளமான பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தி.மு.க.,வின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தெரிவித்தார். இந்த மறியல் போராட்டம் காரணமாக கோவை ரயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...