வாக்குச்சாவடி நிலை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து அரசு ஆசிரியர்கள் போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் கடந்த தேர்தலின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிசெய்தவர்களுக்கு இதுவரை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் கடந்த தேர்தலின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிசெய்தவர்களுக்கு இதுவரை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த தேர்தலின் போது திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு 230 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலராகப் பணி அமர்த்தப்பட்டனர். நிலை அலுவலராகப் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு 7 ஆயிரத்து 150 மதிப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் தேர்தல் பணி செய்ய வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து அரசுப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி உள்ளனர். 

இந்நிலையில், பணியாற்றிய 230 பேர்களில் 211 பேருக்கு மட்டும் அவர்களது சொந்த வங்கிக்கணக்குகளில் பணத்தை செலுத்திவிட்டு மீதமுள்ள 19 பேருக்கு இதுவரை ஊதிய பணத்தை தராமலும் 19 பேர்களின் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்ததாக கூறி, தேர்தல் பணியாற்றிய 19 பேர் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள தேர்தல் பிரிவு தாசில்தார்  ராமலக்ஷ்மணனின் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பணியாற்றிய ஆசிரியர்கள் கூறுகையில், "19 பேரின் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்து விட்டதாகவும், அதிகாரிகளை வந்து கேட்டால் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதாகவும் தங்களுக்கு சேரவேண்டிய தொகையை பெறாமல் வெளியில் செல்லமாட்டோம்", என்று கூறினர். ஆசிரியர்கள் திடீர் காத்திருப்பு போராட்டத்தினால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...