கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் பெண் பலி

கோவை: கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார்.


கோவை: கோவையில் வீட்டிற்குள் லாரி புகுந்த விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக பலியானார். 



சுங்கம் பைப்பாஸ் சாலையை சேர்ந்தவர் மரியதாஸ்(51). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி விக்டோரியா. இன்று அதிகாலை இவர்கள் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி மரியதாசின் வீட்டிற்குள் புகுந்தது. இதில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விக்டோரியா பரிதாபமாக பலியானார். மரியதாஸ் படுகாயமடைந்தார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விக்டோரியாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மரியதாசை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அடிக்கடி சுங்கம் பைபாஸ் சாலையில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், எனவே சாலையின் ஓரத்தில் பாதுகாப்பு சுவர் அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...