கோவைக்கு இரண்டு புதிய கும்கி யானைகள் வருகை

கோவை: கோவைக்கு சேரன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.


கோவை: கோவைக்கு சேரன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. 

காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நேரத்தில் அவற்றை விரட்ட சுஜய் (45) மற்றும் பாரி (37) என்ற இரண்டு கும்கி யானைகள் கடந்த 2012-ம் ஆண்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டன. அவை சாடிவயல் யானைகள் முகாமில் வைக்கப்பட்டிருந்தன. 



இந்த நிலையில், யானைகளின் பணிக்காலம் முடிந்து ஆனைமலை அடுத்த வரகலியாருக்கு பாரியும், முதுமலையை அடுத்த தேக்கம்பட்டிக்கு சுஜயும் அனுப்பப்பட்டன. அவற்றிற்கு பதிலாக சேரன் (32) மற்றும் ஜான் (27) என்ற இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் இருந்து நேற்று கோவைக்கு அழைத்து வரப்பட்டன. 

இது குறித்து மண்டல வன பாதுகாவலர் ராமசுப்ரமணியம் கூறுகையில், " சுஜய் மற்றும் சேரன் என்ற இரண்டு யானைகள் கூடலூரில் வன விலங்குகள் மற்றும் மனித மோதல்களைத் தடுக்க பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அவை இரண்டும் திருப்பி அனுப்பப்பட்டு புதிய கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன." என்றார். 



தற்போது கோவை வந்துள்ள இரண்டு புதிய கும்கிகளின் நினைவாக இரண்டு ஆலமர கன்றுகளை வனத்துறை மருத்துவர் மனோகர் நடவு செய்தார். அந்த யானைகளுக்கு தர்பூசணி, பாலப்பழம், வைக்கோல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டன. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...